தடை செய்யப்பட்ட பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கியது!!

 


கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியா- சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த நபர்களிடம் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களையே சுங்கத் திணைக்களத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் 472 கிலோ மஞ்சள், 352 கிலோ ஏலக்காய் மற்றும் அதிகளவு மருந்துகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 4 மில்லியன் ரூபா என சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இலங்கையில் குறித்த பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால், சுற்றுலாப் பயணிகளாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்கள், தங்கள் பயணப் பொதியில் மறைத்து பொருட்களை நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முயற்சித்தமை தெரியவந்துள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.