நண்பனுடன் வெளியே சென்ற இளைஞன் படுகொலை!!

 


சபுகஸ்கந்த பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவம் நேற்று முன்தினம் இரவு  இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யெஹான் சானுக்க டி அல்விஸ் என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு மாகொல பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு வருகைத்தந்த சானுக தனது நண்பர் ஒருவருடன் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

எனினும் தங்களிடம் எதுவும் கூறமால் திருமணம் செய்யவிருக்கும் மணமகளிடம் மாத்திரம் கூறிவிட்டு சென்றதாக கூறிய உயிரிழந்த இளைஞனின் தாயார், மகனை வெளியே அழைத்து சென்ற இளைஞனை தங்களுக்கு பிடிக்காதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞனுடன் வெளியே சென்ற மகன் சற்று நேரத்தில் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் அப்பகுதிட்யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.