94 பேர் தனிமைப்படுத்தலை மீறியதற்காக கைது!!


 தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த வருடம் ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தம் 80 ஆயிரத்து 654 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் நேற்றைய தினம் மொத்தமாக ஆயிரத்து 414 வாகனங்களில் பயணித்த 2 ஆயிரத்து 258 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் உரிய காரணமின்றி 186 வாகனங்களில் பயணித்த 317 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.