மட்.நாவற்குடா பகுதியில் விபத்து!!
மட்டக்களப்பின் நாவற்குடாவில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதில் வயோதிபர்ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் 70 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரே பாதிக்கப்பட்டு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பேருந்து பிரதான வீதியில் உள்ள யூ வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றவர் மீது மோதியதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின்போது மோட்டார் சைக்கிள் முழுமையாக சேதடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் பேருந்து சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை