அநுரகுமாரவின் ஒப்பந்தத்தால் பரபரப்பு!!

 


ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் ஒப்பந்த பிரதிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது நற்பெயரை சமூகமயப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் எகில்வி என்கின்ற தனியார் விளம்பர நிறுவனத்துடன் ஜே.வி.பி செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரதிகளே இவ்வாறு வெளியாகியுள்ளது.

சுமார் 50 மில்லியன் (05 கோடி ரூபா) செலவில் சமூக வலைத்தளங்கள், தனியார் தொலைக்காட்சிகள் என பல்வேறுமட்ட விளம்பரங்களையும், பிரபல்யப்படுத்துகின்ற செயற்பாடுகளையும் செய்வதற்காக குறித்த நிறுவனம் ஜே.வி.பியுடன் ஒப்பந்தம் செய்துள்ளமை அந்த பிரதிகளில் காணமுடிகிறது. எனினும் அந்த தகவல்களை ஜே.வி.பி முற்றாக நிராகரித்துள்ளது.

இது அரசாங்கத்தின் இயலாத்தன்மை மற்றும் வங்குரோத்து நிலையை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி, இன்று விசேட செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் ஜே.வி.பியை கலங்கப்படுத்துகின்ற இந்த செய்திக்குப் பின்னால் அரசாங்கமே இருப்பதாகவும் அந்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.