இருவர் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கைது!!
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் இருவரும் களனி – கோணவல – கொஹொல்வில வீதியில் சுமார் 2,64,200 சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் வத்தளை - ஹுணுப்பிட்டி பகுதியை சேர்ந்த 21 வயது நபரும், களனி – கோணவல பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை