கொவிட் தொற்றினால் 17இலட்சத்துக்கும் மேற்பட்டோர் செக் குடியரசில் பாதிப்பு!!

 


செக் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் 17இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செக் குடியரசில் 17இலட்சத்து 78பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் செக் குடியரசில் இதுவரை 30ஆயிரத்து 504பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 334பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பத்தாயிரத்து 459பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 16இலட்சத்து 59ஆயிரத்து 115பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.