முகநூல் காதல் - யுவதி உயிரிழப்பு!!

 


பலங்கொட, ஹேலகந்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் மீட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் துஷானி பிரியங்கா என்ற திருமணமாகாத இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி அதே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனுடன் முகநூல் ஊடாக காதல் தொடர்பு ஏற்பட்ட நிலையில், கடந்த 12 நாட்களாக யுவதி இளைஞனின் வீட்டில் வாழ்ந்துள்ளார்.

எனினும் அதுவரையிலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்திருக்கவில்லை என கூறப்படுகின்றது. கடந்த 19ஆம் திகதி இரவு குறித்த இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் இளைஞனின் தாயார் இரவு உணவிற்காக யுவதியை அழைத்த போதிலும் அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

அதோடு யுவதி இருந்த அறை மூடப்பட்டிருந்த நிலையில், கதவை உடைத்த பார்த்தபோது அவர் கயிறு ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் கயிற்றை வெட்டி அவரை காப்பாற்ற முயற்சித்ததாக இளைஞனின் தாயார் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் பிரேத பரிசோதனையின் போது அவரது கழுத்து கயிற்றில் தொங்கவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யுவதியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.