அண்டாவில் மிதந்து வந்த மணமக்கள் - கேரளாவில் சம்பவம்!!

 


இந்தியாவின் கேரளா மாநிலத்தில் திருமண தம்பதிகள் கோயிலுக்கு அண்டாவில் வந்து இறங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கேரளா மாநிலத்தில் கடும்மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளதுடன், கடும்மழை வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்ப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், செங்கனூர் மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வந்த மணமக்களுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணம் நடத்தவிருந்த தினத்தில் கேரளா முழுமையும் கடும் மழை கொட்டி தீர்த்ததனால் வெள்ளம் ஏற்பட்டது. எனினும் நிச்சயிக்கபட்ட நாளில் தங்கள் திருமணத்தை நடத்தி முடிக்க அவர்கள் முடிவு செய்து, தளவாடி என்ற பகுதியில் உள்ள கோயிலில் திருமணத்தை நடத்துவதென தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் கோயில் அமைந்துள்ள பகுதியில் அதிக வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய அண்டாவில் மணமக்கள் ஏறி அமர்ந்து கொண்டு நீரில் மிதந்து கோயிலுக்கு சென்றுள்ளனர்.

இறுதியில் திருமணம் திட்டமிட்டபடியே எளிமையாக நடந்து முடிந்துள்ளது. தற்போது குறித்த திருமண புகைப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், மணமக்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.