நிரூபமா ராஜபக்ஷவுக்கு வந்த அழைப்பு!
பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் சேர்த்ததாக பண்டோரா ஆவண சர்ச்சையில் அவரும் அவரது கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசனும் சிக்கியுள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் இரண்டுமுறை விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே நிரூபமா ராஜபக்ஷவுக்கும் ஆணைக்குழு விசாரணைக்கான அழைப்பை விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் விசாரணைத் திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை