ரஷ்யாவின் போர்க் கப்பலுடன் நீர்மூழ்கிகள் கொழும்புக்கு

 


ரஷ்யாவின் போர்க் கப்பல் ஒன்றுடன், அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கப்பல்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் அந்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.

சேவைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், அந்தக் கப்பல்கள் நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.