பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்த தீர்மானம்!!


 பாடசாலை போக்குவரத்துக்கு சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தினால் போக்குவரத்துக்கு கட்டணம் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வாகனங்களின் உதிரி பாகங்கள் சடுதியாக உயர்ந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் எரிபொருளின் விலை ஏற்றதினால் இந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் பாடசலைகளை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு மாணவர்களின் போக்குவரத்து கட்டண உயர்வும் தீர்மானிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் எரிபொருள் விலை உயர்ந்தால் பேருந்து கட்டணத்தில் திருத்தும் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.