இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!!

 


இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

கடந்த 5ம் திகதி, இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகு, குருநகர் பகுதி மீனவர்களின் படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு, படகில் இருந்த குருநகர் மீனவர்களை தாக்க இந்திய மீனவர்கள் முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர் சங்கங்களின் ஏற்பாட்டில் குறித்த  ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.

எமது கடல் வளங்களை அழிக்காதே, இலங்கை அரசே இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்து,  எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வெளிநாட்டு மீனவர்களை அனுமதிக்காதே, இலங்கை அரசே உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்து,  கடல் வளத்தை சுரண்டி எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே போன்ற பல்வேறு கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

குறித்த போராட்டத்திற்கு பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட பணிப்பாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களினால் குறித்த விடயம் தொடர்பாக மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, கடற்றொழில் அமைச்சருக்கும் யாழ்.மாவட்ட செயலகத்திற்கும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கும் மனு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.