எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு!


நாட்டில் சமையல் எரிவாயு கூடுதல் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதேவேளை எரிவாயு தட்டுப்பாட்டினால் சில ஹோட்டல்கள் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது நாட்டில்  சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் லிட்ரோ எரிவாயு அடங்கிய கொள்கலன் கப்பல் ஒன்று நாட்டை வந்த டைந்துள்ளதாகவும், விரைவில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலை நீங்கும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் தேஷர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதோடு நாளாந்தம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, குறைந்த விலைக்கு எரிவாயு விற்பனை செய்யக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் நிதி அமைச்சின் தலையீட்டுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை யினால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய நேரிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் நலின் சமந்த தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு 600 டொலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஓமான் டிரேடின் என் னும் நிறுவனத்திடம் கையொப்பம் செய்துகொண்டமையால் 800 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் உணவு சமைக்க முடியாமையால் நேற்று பிற்பகல் சில ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.