யாழில் கஞ்சாவுடன் தப்பி ஓடிய ஹயஸ்!


யாழ்ப்பாணம் இளவாலை பகுதியிலிருந்து கஞ்சாவுடன் பயணித்த ஹயஸ் வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்று தெல்லிப்பழையில் வைத்து மடக்கிப்பிடித்துள்ளனர்.

அத்துடன் ஹயஸ் வாகனத்தை செலுத்திய சாரதியை கைது செய்த பொலிஸார், வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இளவாலை பகுதியில் கஞ்சாவுடன் ஹயஸ் வாகனம் ஒன்று பயணிப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த வாகனத்தை மரித்து பொலிஸார் சோதனையிட முயற்சித்தபோது வாகனம் நிற்காமல் தப்பி ஓடியுள்ளது.

இதனையடுத்து அதனை துரத்திச் சென்ற பொலிஸார் தெல்லிப்பழையில் வைத்து வாகனத்தை கைப்பற்றியதுடன், அதிலிருந்து 2 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.

கைதான நபர் வவுனியாவிலிருந்து கஞ்சா வாங்குவதற்காக இளவாலைக்கு வந்தமை விசாரணைகளில் தொியவந்துள்ளது. இந்நிலையில் , சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.