தனிப்பெரும்பான்மையை தக்க வைத்து ஜப்பானில் ஆளும் கட்சி வெற்றி!!
ஜப்பான் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனிப்பெரும்பான்மையைப் பிடித்து ஆட்சியயை கைப்பற்றியுள்ளது.
கூட்டணிக் கட்சியின் ஆதரவு இல்லாமல் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 233 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது.
அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 465 இடங்களில் 276 இடங்களை லிபரல் டெமாக்ரடிக் கட்சி கைப்பற்றியது
64 வயதுடைய புமியோ கிஷிடா ஒரு மாதத்திற்கு முன்னர் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
ஜப்பானிய அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திய லிபரல் டெமாக்ரடிக் கட்சி கொரோனா தொற்றைக் கையாண்டத விதம் தொடர்பாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
இதனை அடுத்து யோஷிஹிட் சுகா செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து புமியோ கிஷிடா புதிய பிரதமராக பதவியேற்றார் இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு இது ஒரு பெரிய வெற்றி என கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை