கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை!

 


தமிழகத்தில்; கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், 6 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடலோர பகுதிகள் மற்றும் அதனை அண்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது.
இதன்காரணமாக எதிர்வரும் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.