கிளிநொச்சி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!


கிளிநொச்சியில் பரவலாக கனத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம் ஆகியன வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றன.

கிளிநொச்சியில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணமாக கனகாம்பிகைக்குளம் வான்பாய ஆரம்பித்தது. இந்நிலையில் நேற்று இரவு (08) முதல் பெய்த பலத்த மழை காரணமாக வன்னுரிக்குளம் இன்று வான்பாய ஆரம்பித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. குளங்களிற்கு நீர்வருகை அதிகரித்துள்ளது. இன்று காலை 7 மணி வரையான அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்பாசன குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட இரணைமடு குளம் 24 அடி இரண்டு அங்குலமாக உயர்ந்துள்ளது.

இதேவேளை 26 அடி அடைவுமட்டம் கொண்ட கல்மடு குளம் 24 அடி மூன்று அங்குலமாகவும், 12 அடி அடைவுமட்டம் கொண்ட பிரமந்தனாறு குளம் 9 அடி ஒரு அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

19 அடி அடைவுமட்டம் கொண்ட புதுமுறிப்பு குளம் 17 அடி ஐந்து அங்குலமாகவும், 25 அடி அடைவுமட்டம் கொண்ட அக்கராயன்குளம் 18 அடி மூன்று அங்குலமாகவும்,10 அடைவுமட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 8 அங்குலமாகவும், 8 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட குடமுருட்டி குளம் 6 அடி ஒன்பது அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

இதேவேளை, 10 அடி ஆறு அங்குலம் கொள்ளவு கொண்ட கனகாம்பிகைக்குளம் அடைவு மட்டத்தை அடைந்து 5 புள்ளி ஐந்து அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 9 அடி ஆறு அங்குலம் அடைவு மட்டம் கொண்ட வன்னேரிக்குளம் அடைவு மட்டத்தை அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.

நீர் நிலைகளில் நீர்வருகை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதாலு்ம, கிளிநொச்சி மாவட்டத்திற்கு மழை பெய்யும் சார்த்தியக்கூறுகள் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், நீர்நிலைகள், நீர்வடிந்தோடும் பகுதிகளிற்கு செல்வதை தவிர்க்குமாறும், தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைகளில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்ப தரப்பினர் ஊடாக பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.