சுமார் 1500 பெண்கள் இலங்கையில் மாயம்!!

 


நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடந்த சில மாதங்களில் சுமார் 1500 பெண்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் பயணப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விசாரணை களில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு காணாமல் போன பெண்களில் திருமணமானவர்களும் அடங்குவதுடன், சில பெண்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.