இலங்கை நாடாளுமன்ற செங்கோலுக்கு சேதம்!!

 


நாடாளுமன்ற செங்கோலில், சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அமைதியின்மைகளின் போது, இந்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த சேதங்களை சரி செய்வதற்கான இயலுமை, உள்நாட்டில் கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதோடு செங்கோலில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின், அதனை பிரித்தானியாவிலுள்ள அதன் தாய் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

எனினும், குறித்த சேதம் பாரிய சேதம் கிடையாது என்றும் படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.