பசில் ராஜபக்ஷ இந்தியா பயணம்!!

 




நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயத்தின்போது நாட்டுக்கு தேவையான வெளிநாட்டு கையிருப்பை பெற்றுக்கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில், புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும் தேர்தல் முறைமை தொடர்பிலான நாடாளுமன்றின் தெரிவு குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.