நினைவுகூரல் தொடர்பில் சஜித் காட்டம்!!

 




இலங்கையில் யுத்ததின்போதும் வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை, அவர்களின் உறவுகள் நினைவேந்தும் உரிமையை எவரும் தடுக்கவே முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த காலங்களில் யுத்ததின்போதும் வன்முறைகளின்போதும் பலர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு யுத்ததின் உயிரிழந்தவர்களை இன ரீதியிலோ அல்லது மத ரீதியிலோ பிரித்துப் பார்க்கக்கூடாது. அனைவரும் மனிதர்கள். உயிரிழந்தவர்களின் வலி அவர்களின் உறவுகளுக்குத்தான் தெரியும்.

அதில் எவரும் அரசியல் நடத்தக்கூடாது. உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை, அவர்களின் உறவுகள் நினைவேந்துவதை எவரும் தடுக்கவே முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.