விவசாய சமூகத்துடன் இணைந்து நவம்பர் 16 இல் போராட்டம்!


நவம்பர் 16 ஆம் திகதி இரண்டு மில்லியன் விவசாய சமூகத்துடன் இணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அண்மையில் ஆற்றிய உரையில் விவசாய சமூகத்திற்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு கொரோனா தொற்றினால் உயிரிழந்த 13 ஆயிரம் குடும்பங்களுக்காக அந்த உரையில் எதையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கவில்லை என்றும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மக்கள் தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அர்த்தமற்ற வகையில் ஜனாதிபதி கருத்து தெரிவித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.