மீண்டும் ஆரம்பமானது கொழும்பு- கண்டி ரயில் சேவை!!
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர (Dhammika Jayasundara) தெரிவித்துள்ளார்.
குறித்த சேவையானது நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் ரம்புக்கனை - பலான ரயில் நிலையம் வரை தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை