பயணத்தின் போது அம்பாறையில் மக்கள் அவதி!!

 


அம்பாறையில் கரையோரப் பிரதேசங்களில் இன்று (21) காலை முதல் கடுமையான பனி மூட்டங்கள் காணப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடுமையான பனி மூட்டங்களால் வாகன சாரதிகள் உட்பட பொதுமக்கள் சிரமங்களுடன் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை பல இடங்களில் சாரதிகள், வாகனங்களில் வெளிச்சங்களை ஒளிரச் செய்தபடி பயணிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, காரைதீவு, நிந்தவூர் ,சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, ஒலுவில், போன்ற பிரதேசங்களில் அதிக அளவு பனி மூட்டங்கள் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.



அம்பாறையில் அண்மைக்காலமாக காலநிலை மாற்றங்கள் அடிக்கடி மாறுபட்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.