தன்முனைக் கவிதைகள்!!
மெள்ள மெள்ளத்
தொலைந்து வரும் மனிதம்
கண்ணில் இரக்கமின்றிக்
கடந்து போகும் ஏதிலிகள்.
*****
சொகுசுப் பயணத்தில்
எசமானருடன் வளர்ப்பு நாய்
தொலைந்த பழம் நினைவுகளில்
முதியோர் இல்லத்தில் தாய்
*****
புதையல் தேடும் பிள்ளைகள்
வெளிநாட்டு வேலை வாய்ப்பில்
புதையலான பெற்றோர்கள்
ஆதரவற்ற தனிமையில்
*****
பழமையைப் போற்றுவோம் எனப்
மேடை தோறும் முழங்கியோன்
ஓசையின்றிச் சேர்த்துவிட்டான்
முதியோர் இல்லத்தில் பெற்றோரை
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
வலிஉணர்த்தும் தன்முனைக் கவிதைகள்...
பதிலளிநீக்குவாழ்த்துகள்!