முல்லைத்தீவிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அம்மாவட்டத்திலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 75 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கான மகஜரை தபால் ஊடாக அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை