போராட்டங்களால் டொலர்கள் கிடைக்காது – கம்மன்பில!!
எதிர்ப்பு போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீளத் திறக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பைப் பாதுகாப்பதற்காகவே கச்சா எண்ணெய் இறக்குமதியை இலங்கை நிறுத்தியதாக தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் இறக்குமதியை ஆரம்பித்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை மீண்டும் தொடங்குவது அவசியம் என தானும் கருதுவதாகவும் எனினும் போராட்டங்கள் டொலர்களை ஈட்டித் தருவதில்லை என்ற கசப்பான உண்மையை தொழிற்சங்கங்கள் புரிந்து கொள்ளவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தொழிற்சங்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை முன்கூட்டியே சிந்திக்க வேண்டும் என்றும் எரிசக்தி அமைச்சராக தனக்கும் டொலர் சம்பாதிக்கும் திறன் இல்லை னவும் அவர் தெரிவித்தார்.
தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக இருந்தால், திறைசேரி தனக்கு டொலர்களை வழங்க வேண்டும் எனவும், திறைசேரிக்கு டொலர்களை ஈட்டக்கூடிய வழிமுறைகளை அமைச்சு தற்போது வகுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை