கூட்டமைப்பு வவுனியாவில் தோல்வியை சந்தித்தது!!

 


கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளர் சு.தணிகாலசத்தினால் சபையில் இன்று முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து பாதீடு தொடர்பில் உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து வரவு செலவு திட்டம் சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் போது 26 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மட்டும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.