யாழ்தேவி - முச்சக்கரவண்டி விபத்து!!
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதம், ஓட்டோ விபத்துக்கு உள்ளானதில், முச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் , முச்சக்கரவண்டி சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
குறித்த விபத்து, இன்றுக் காலை 10 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் ரயிவே கடவையில், இடம்பெற்றுள்ளது. ஓமந்தை பகுதியில் இருந்து தாண்டிக்குளம் புகையிரதக்கடவையால் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி , தண்டவாளப்பகுதியில் சென்றபோது இயந்திரக்கோளாற்றினால் நின்றுள்ளது.
இதன்போது கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த யாழ்.தேவி, குறித்த ஓட்டோவை மோதித்தள்ளியது. எனினும் முச்சக்கரவண்டியிலிருந்து சாரதி, கீழே பாய்ந்து தப்பியோடியமையால், உயிர்த்தப்பினார்.
மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை