கண்டியில் ஒருவர் பொலிஸாரால் அதிரடியாக கைது!!

 


1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டுடன் சந்தேக நபரொருவர் ரங்கல பொலிஸ் பிரிவில் உடவல சந்தியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய 1000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் ஐம்பதுடன் மேலுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 46 வயதுடைய உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.