பேக்கரிப் பண்டங்களின் நிறைகள் மாற்றம்!!
நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ள நிலையில் பாண் மற்றும் ஏனைய பேக்கரிப் பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளது.
இதனால் தற்போது சந்தையில் கிடைக்கும் கோதுமை மாவைப் பயன்படுத்தி உணவுப் பண்டங் களைத் தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதோடு தற்போதைய நிலையில் மாவைப் பயன்படுத்தி பாண் தயாரிக்கும் போது, பாண் சரியான தரத்துக்கு பொங்கி வராமையால், மேற்பகுதி வெடித்து விடும் என்கிறார்கள். இதனால் தமது உற்பத்தியின் வடிவத்திலும் சுவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சில பேக்கரி பண்டங்களின் விலை அதிகரித்துள்ள போதிலும் பாண் சரியான எடையில் இல்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி ஒரு பாண் 450 கிராம் எடையுள்ளதாக இருக்க வேண்டும்.
ஆனால் சில இடங்களில் வாங்கும் பாண் 332 கிராம் உள்ளதாகவும் றோஸ் பாண் 90 கிராம் எடை உள்ளதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை