மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத்தில் 3 எரிவாயு அடுப்பு வெடிப்பு!!

 


மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணிதொடக்கம் இன்று  பகல் 12 மணிவரையில 3 எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி காதாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் இன்று (வியாழக்கிழமை) பகல் 11.30 மணிக்கு, எரிவாயு அடுப்பில் சமைக்க முற்பட்டபோது  எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது

அதேபோன்று காத்தான்குடி- மொடோன் பாம் பகுதியிலுள்ள வீடொன்றில், நேற்று இரவு எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. இந்த இரு வெடிப்பு சம்பவங்களிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் அம்பாறை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள வளத்தாப்பிட்டி பிரதேசத்திலுள்ள செல்லையா விஜயா என்பவரின் வீட்டின் எரிவாயு அடுப்பு, இன்று பகல் 11 மணியளவில் வெடித்து சிதறியுள்ளதாகவும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சம்மாந்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்தந்த பிரதேச பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.