நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை- திஸ்ஸ குட்டியாராச்சி!!
நாட்டில் இதுவரை எந்தவொரு எரிவாயு சிலிண்டர்களும் வெடிக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எரிவாயு அடுப்பைத் தவிர வேறு எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.
மேலும், எரிவாயு கலவையில் பிரச்சனை இல்லை. ஆனால் எரிவாயு அடுப்பில்தான் பிரச்சினை இருக்கின்றது.
ஆகவே, எரிவாயு சிலிண்டர்களில் கவனம் செலுத்துவது போன்று எரிவாயு அடுப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை