நீதிபதி இளஞ்செழியனுக்கு மீண்டும் இடமாற்றம்!!

 


நாட்டில் அடுத்தாண்டுக்கான (2022) வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ( Ilanchelian) வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றவுள்ளார்.

மேலும், மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றவுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் இடமாற்றவுள்ளார். மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக, திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன் இடமாற்றப்பட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.