தமிழக மீனவர்கள் கைது – செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைப்பு!!

 


இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள 43 இராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய உதவுமாறு பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர் சங்கத்தினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த மீனவர்களின் விடுதலை தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் தற்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததன் பின்னர் மீனவர்களை விடுவிப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த முறை 23 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த தருணத்தில் தமிழக மீனவர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அவர்களை விடுதலை செய்வதற்கான உதவிகளையும் செந்தில் தொண்டமான் முன்னெடுத்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.