மீனவர் மாரடைப்பால் பரிதாப மரணம்!!

 


மட்டக்களப்பு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


அவரின் சடலம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு இன்று கொண்டுவரப்பட்டது என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

அசன்பாவா வீதி பிறைந்துறையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான எம்.ஐ.எம்.பாறுக் (வயது 47) என்பவரே மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் படகில் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை துறைமுகத்தில் வைத்து சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் உயிரிழந்தவருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று வாழைச்சேனை பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.