வெடிப்பு குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!!
சமையல் எரிவாயு விபத்தை தடுப்பதற்காக பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ விபத்து குறித்து விசாணைகளை மேற்கொண்டு தீர்வு அறிக்கையை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு இதனைத் தெரிவித்துள்ளது.
‘பாதுகாப்பு முதலில்’ என்ற கருத்துக்கு அமைவாக இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அதன் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், எரிவாயு தொடர்பில் விபத்துக்கள் ஏற்பட்டாலோ அல்லது ஏற்படும் சாத்தியம் காணப்பட்டாலோ அருகில் உள்ள சமையல் எரிவாயு முகவர், பொலிஸ் நிலையம் அல்லது இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அறிவிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த குழுவின் தொலைபேசி இலக்கங்கள் இதோ..!
0115 811927 / 0115 811929
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை