கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம்!


 “நாட்டில் தற்போது நோய் அறிகுறிகள் அற்ற அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அவர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபை உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.”


-இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-


“தற்போது நாளாந்தம் 800 இற்கும் அதிகமான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். தற்போதைய சூழ்நிலை மிக ஆபத்தானது.


தாங்கள் செல்கின்ற பிரதேசங்களில் குறைந்தபட்சம் ஒருவரேனும் கொரோனா நோய் தொற்றுடன் இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். அவர்களில் அதிகமானவர்கள் ஒமிக்ரோன் திரிபுடையவர்கள்.


மேலும், அவர்களில் டெல்டா திரிபையும் கொண்டவர்கள் இருக்கக்கூடும் என்பதை மறக்கக்கூடாது” – என்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.