பண்டத்தரிப்பில் சிறுமி மரணம்!


 சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி மரணம்!


உடல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த சிறுமி இன்று காலை சுகவீனம் காரணமாக சங்கானை பிரதேச வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


சுவாச பிரச்சினை காரணமாக குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சிறுமியின் உடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.


பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா என்ற 4 வயது நிரம்பிய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.