தாய், மகளை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!


மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுயில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் அரச மதுபானங்களை விற்பனையில் ஈடுபட்டு வந்த தாய் மற்றும் மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம் வவுணதீவு – தாண்டியடி புதுமண்ட பத்தடியிலுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த கைது சம்பவத்தின் போது, கசிப்பு மற்றும் மதுபானப் போத்தல்களையும் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய நேற்று மாலை குறித்த பகுதியிக்கு அருகே உள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டனர்.

குறித்த முற்றுகையில் போது ஒரு வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 5 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.

மேலும், அருகில் உள்ள வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அரச மதுபானங்களைச் சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை 10 கால் போத்தல் மதுபானங்களுடன் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் தாயும் மகளும் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.