இலங்கையில் தட்டுப்பாடு வரவுள்ள மேலும் இரண்டு பொருட்கள்!


இலங்கையில் எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப் பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர (Ajith Gunasekara ) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கால்நடை தீவனம் கிடைக்காததால், முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

மேலும், கால்நடை தீவனம் விரைவில் வழங்கப்படாவிட்டால் தட்டுப்பாட்டு நிலையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கோழி இறைச்சிக்கு அதிக கிராக்கி இருந்ததால் விலையும் வேகமாக அதிகரித்தது.

இந்நிலையில், தேவை குறைவடைந்ததன் காரணமாக கோழி மற்றும் முட்டையின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.