மீண்டும் நாட்டில் மின்வெட்டு ஏற்படலாம்!


எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் மீண்டுமொரு மின் தடை ஏற்படுமென இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

டீசல் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின் நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்சாரம் தடைபடக் கூடும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க சம்மேளனத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமையினால் 160 மெகா வொட்ஸ் மின்சாரம் தேசிய மின்கட்டணத்திற்கு இழக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.