ஓய்வுபெற்ற வைத்தியர் வீட்டில் துப்பாக்கிகள் மீட்பு!!

 


ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து பெருமளவிலான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொரளை தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த ஓய்வுபெற்ற வைத்தியர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது வீட்டில் மேற்கொண்ட பொலிஸார் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மேலதிகமாக இரண்டு வாள்கள் மற்றும் கத்தி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய – பனாமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, குறித்த வைத்தியர் தொடர்பாக தகவல் வழங்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.