கொரோனா காரணமாக வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயம் மூடப்பட்டது!!

 


கொரோனா தொற்று காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களுக்கு  நேற்று (வியாழக்கிழமை ) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடவு சீட்டு வீநிநோயகம், கடவுச் சீட்டு விண்ணப்பம் பெறுதல் என அனைத்து செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டு பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த உத்தியோகத்தர்களுக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.