மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வென்றது அயர்லாந்து அணி!


மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்துக் கிரிக்கெட் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி, 2-1 என்ற கணக்கில் வென்றது.

ஜமைக்கா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாய் ஹோப் 53 ஓட்டங்களையும் ஜேஸன் ஹோல்டர் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹென்டி மெக்பிரைன் 4 விக்கெட்டுகளையும் கிரைஜ் யங் 3 விக்கெட்டுகளையும் கர்டிஸ் கெம்பர் மற்றும் டொக்ரெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்துக் கிரிக்கெட் அணி, 44.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அயர்லாந்துக் கிரிக்கெட் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்டி மெக்பிரைன் 59 ஓட்டங்களையும் ஹரி டெக்டர் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அகீல் ஹொசைன் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் மற்றும் ஒடீயன் ஸ்மித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயகனாக அயர்லாந்தின் ஹென்டி மெக்பிரைன் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.