நாட்டில் இன்றும் மின்வெட்டுக்கு வாய்ப்பு!
நாட்டின் பல்வேறு பிரேதேசங்களில் இன்றும் மின்வெட்டுக்கு வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் கோளாறு மற்றும் அதிக மின் தேவை காரணமாக செயலிழந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது. அதேசமயம் நேற்று இரவு கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் பல தடவைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
களனிதிஸ்ஸ அனல் மின்நிலையத்தில் ஜெனரேட்டர் பழுதானதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இரவு 9.30 மணியளவில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை