குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

 


முல்லைத்தீவில் உள்ள பகுதி ஒன்றில் உள்ள இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சமப்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை (16-01-2022) ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் கணேஸ்வீதி தேவிபுரம் பகுதியை சேர்ந்த  38 வயதுடைய ஆறுமுகம் பிரதீபன் என்ற குடும்பஸ்தர் இவ்வாறு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது, வீட்டில் ஏற்பட்ட குடும்ப முரண்பாடு காரணமாக இவ்வாறான தவறான முடிவினை எடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.