பிரதமர் மகிந்தவுக்கு இப்படி ஒரு பரிதாப நிலை!


யாழ்.பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்ற நிலையில் அங்குள்ள பிரதமரின் உருவப்படம் ஒன்று தேடுவாரற்ற நிலையில் காணப்படுகின்றது.

குறித்த வீதியில் உள்ள காணி ஒன்றினுள் சிறிய தற்காலிக கொட்டில் ஒன்றில் குறித்த அலுவலகம் இயங்கி வந்தது. இந்த நிலையில், அலுவலகம் மேற் கூரையின்றிய நிலையில் காணப்படுகின்ற நிலையில் அலுவலகத்தினுள் கதிரை மேசைகள் உள்ளிட்ட அலுவலக பொருட்கள் சிலவும் காணப்பட்டன.

அதோடு அலுவலக கதவும் பழுதடைந்த நிலையில் திறந்தவாறே காணப்படுவதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் உருவப் படம் ஒன்றும் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.