மத போதகரின் குடும்பத்தை கடத்தி 7.5 மில்லியன் ரூபாய் கொள்ளை!


மத போதகர் உட்பட அவரது குடும்பத்தை கடத்தி 7.5 மில்லியன் ரூபாய் கொள்ளையடித்த 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வெல்லவாய-குடா ஓயா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள தேவாலயமொன்றை உடைத்து அதன் போதகர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை கடத்திச் சென்று 7.5 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபர்கள் நேற்று மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த 30-40 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.